Date:

2025 ஆம் ஆண்டு மே மாத ஏற்றுமதி செயல்திறன் குறித்து ஒன்றிணைந்த கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிவிப்பு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி மே 2025 இல் சீராக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 0.63% குறைந்துள்ளதாக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பு 356.08 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஏற்றுமதி 5.15% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மற்ற சந்தைகளுக்கான ஏற்றுமதி 11.1% அதிகரித்துள்ளது, ஆனால் இது பல முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ஏற்பட்டது என்று ஒன்றிணைந்த கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 7.59% மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 6.81% குறைந்துள்ளது, இது மேற்கத்திய நுகர்வோர் சந்தைகளில் தேவையின் ஏற்ற இறக்கத்தை தொடர்ந்து காட்டுகிறது.

மே 2025 இல் இந்த சரிவு இருந்தபோதிலும், அந்த ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான மொத்த வருவாய் 9.8% அதிகரித்து 2.02 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது, இது ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இங்கிலாந்து தவிர்த்து, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத சந்தைகளுக்கான ஏற்றுமதியும் 15.36% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது, அதே நேரத்தில் பாரம்பரியமற்ற சந்தைகள் 13.12% வளர்ச்சியடைந்தன. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கான ஏற்றுமதிகளில் மிதமான இலாபங்கள் பதிவாகியுள்ளன, அவை முறையே 6.52% மற்றும் 3.74% ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆடை சங்கங்களின் ஒன்றியம், கைத்தொழில்துறையின் வருடாந்தரச் செயற்பாடு, மூலோபாய சந்தைக்கு மாறுவதாலும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளில் தொடர்ச்சியான முதலீடுகளாலும் உந்தப்பட்ட நெகிழ்ச்சித்தன்மையையும், தகவமைப்பையும் வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டது. ஐரோப்பிய பிராந்திய சந்தையின் சாத்தியக்கூறுகள் தங்களை ஊக்குவிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த ஒன்றியம் மேலும் கூறியது.

இங்கு JAAF, இந்த முன்னேற்றத்தைத் தொடர்வதற்கும், நீண்டகாலப் போட்டித்தன்மைக்கு வாய்ப்பளிப்பதற்கும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் ஒரு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய வர்த்தகக் கொள்கையின் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.