Date:

பாலம் உடைந்ததில்: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

குஜராத் மாநிலத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 லாரிகள் உள்ளிட்ட 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். குஜராத்தில் வடோதரா – ஆனந்த் ஆகிய நகரங்களை இணைக்கும் முக்கிய பாலம் கம்பி ரா. மஹிசாகர் ஆற்றின் மீது 43 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டது.

வடோதரா மாவட்டத்தின் பத்ரா தாலுகாவில் உள்ள முச்பூரில் அமைந்துள்ள இந்த பாலம் மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடன் இணைக்கும் பாலமாகவும் இருப்பதால் 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இந்நிலையில், காலை 7.30 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2 லாரிகள், ஒரு பிக்அப் வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் பாலத்தின் இடிபாடுகளுடன் சேர்ந்து ஆற்றில் விழுந்தன.

டேங்கர் லாரி ஒன்றும் உடைந்த பாலத்தின் நுனியில் ஆபத்தான சூழலில் சிக்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியும், நீரில் மூழ்கியும் 10 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த வடோதரா மாவட்ட மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் 5 பேரை மீட்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் மூழ்கி கான்கிரீட் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆற்றில் விழுந்த வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் இடிந்து விழுந்ததிற்கான காரணம் குறித்து குஜராத் அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம் – சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

பேருந்து கட்டணத்தில் திருத்த…

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும்...

ஆப்கான் நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்

நெடுஞ்சாலையில் செலுத்தப்படும் எந்தவொரு வாகனத்திலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று...