Date:

“கச்சத்தீவை இலங்கை விட்டுக்கொடுக்காது”

கச்சத்தீவை இலங்கை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் கூறியுள்ளார்.

 

“இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எங்கள் இராஜதந்திர வழிகள் திறந்தே உள்ளன. ஆனால், இலங்கையின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க இலங்கை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்பது உறுதி. இது சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்ட கச்சத்தீவு,” என்றும் கூறியுள்ளார்.

 

கடந்த வாரம் ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே விஜித ஹெராத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

ஜூன் 27 அன்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை இந்திய மீனவர்களைக் கைது செய்யும் பிரச்சினைக்கு1975ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அவசரநிலையின் போது, கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் காரணமாகும், இதன் கீழ் சில குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமைகள் கைவிடப்பட்டுள்ளன.

 

இருப்பினும், அமைச்சர் ஹெராத் இந்தப் பிரச்சினையை நிராகரித்து, கச்சத்தீவு பிரச்சினையில் முரண்பாடுகள் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் என்று கூறியுள்ளார்.

 

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதாக குற்றம் சாட்டிய ஹெராத், அவர்கள் மீன்பிடி வளங்களை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல், கடல் தாவரங்களையும் சேதப்படுத்துகிறார்கள் என்றும் ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கை கடல் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடித்தலை ஆதரிக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தீவு நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.