Date:

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை

வங்​கதேசத்​தில் பிரதம​ராக இருந்த அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்த ஆண்டு மாணவர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது வன்​முறை​யாக மாறிய தையடுத்​து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைந்​தது.

இதையடுத்​து, சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யத்​தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்​வேறு வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இந்த வழக்கை விசா​ரித்த தீர்ப்​பா​யம் ஹசீனா ஆஜராக உத்​தர​விட்​டது. ஆனால் அவர் ஆஜராக​வில்​லை. இதையடுத்து நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், ஐசிடி-​யின் தலை​வர் நீதிபதி முகமது குலாம் முர்​துசா மஜும்​தார் தலை​மையி​லான 3 பேர் அடங்​கிய அமர்​வு, நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் ஹசீ​னா​வுக்கு 6 மாதம் சிறை தண்​டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்​கியது. வங்​கதேசத்​திலிருந்து தப்​பிய பிறகு ஹசீ​னா​வுக்கு சிறை தண்​டனை வழங்​கப்​பட்​டிருப்​பது இது​தான் முதல் முறை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கஹவத்தையில் பதற்றம் : பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக்...

பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம...

அப்துல் வஸீத் எம்.பியாக நியமனம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர் அப்துல் வஸீத் இலங்கையின் 10வது...

இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்...