Date:

மேர்வின் சில்வா உள்ளிட்டோருக்கு பிணை

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சரீரப் பிணையிலும், தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டது.

கிரிபத்கொடை பகுதியில் அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஜெயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரக்கோன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இவர்களில் மேர்வின் சில்வா கடந்த மார்ச் மாதம் கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது குற்றப் புலனாய்வுத் பிரிவு (சிஐடி) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...

நீதிமன்றில் ஆஜராகத் தயார்! சட்டத்தரணி வன்னிநாயக்க அறிவிப்பு

பொலிஸாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க,...

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் – ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்...