Date:

அபராதத் தொகையை ஒன்லைனில் செலுத்த அனுமதி

போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதை கூறினார்.

“இப்போது அபராதம் செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று அமைச்சரவை அனுமதி அளித்தது.

தற்போது, ​​குருநாகல் முதல் அனுராதபுரம் வரை மட்டுமே தொலைபேசி மூலம் அபராதம் செலுத்த முடியும்.

இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இப்போது தொலைபேசிகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு முதல், எங்கிருந்தும் அபராதம் செலுத்தலாம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நீதிமன்றில் ஆஜராகத் தயார்! சட்டத்தரணி வன்னிநாயக்க அறிவிப்பு

பொலிஸாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க,...

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் – ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்...

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி

உத்தியோகபூர்வ சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய புதன்கிழமை...