Date:

முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சம் கோரியதற்காக முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (25) 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த தீர்ப்பை வழங்கினார்.

மேலும், பிரதிவாதிக்கு 30,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் இலஞ்சத் தொகையை அபராதமாக வசூலிக்கவும் அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலதிகமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சட்டத்தரணிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதியன்று பிரதிவாதி தொடர்புடைய இலஞ்சத்தைப் பெற்றபோது, இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலும், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 67 வயதுடைய முன்னாள் காணி அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...