Date:

“தண்டனை தொடரும்”: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப்பெரிய தவறிழைத்து விட்டார்கள். பெரும் குற்றம் புரிந்துள்ளார்கள். இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டிய நாடு. தண்டனை தொடர்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த எச்சரிக்கைப் பதிவில் அமெரிக்காவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இருப்பினும் ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சையத் இராவானி கூறுகையில், “அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். எந்த நேரத்தில், எத்தகைய தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஈரான் ராணுவம் முடிவு செய்யும்.” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​ட நிலையில் கமேனி இந்த எச்சரிக்கப் பதிவை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, “அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரித்தால், மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்க ராணுவம் துல்லியதாக்குதல் நடத்தியது. இதில், 3 தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் உடனே அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாட்டின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும்.” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்க தாக்குதலை ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்துள்ளன. ரஷ்யா, துருக்கி, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு”

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு' எனும் தொனிப்பொருளின்...

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி...

சடுதியாக அதிகரித்த மசகு எண்ணெய் விலை!

தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான...

இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான...