கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் விராய்கெலி பல்தசார் தெரிவு செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (18) அன்று அவர் உத்தியோக பூர்வமாக மேயர்பதவியேற்றார்.
அதன் பிறகு புதன்கிழமை மாலை மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் சக உறுப்பினர் சாமர அவர்களின் ஏற்பாட்டில் வடகொழும்பு தொகுதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வழிபாட்டில் கலந்து கொண்டார். அத்துடன் மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு அருட்தந்தையர்களின் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.