ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்மொழியவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இல்லாததால், இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் திடீரென முடிவுக்கு வந்தன.
பாராமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் பிரேரணையை முன்மொழியத் தொடங்கியதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு உறுப்பினர் சார்பாக மற்றொரு உறுப்பினர் ஒரு தீர்மானத்தை முன்மொழிய முடியாது என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவும் அமைச்சர் விஜித ஹேர்த்தும் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சபையை, நாளை (19) காலை 9.30 வரை ஒத்திவைத்தார்