Date:

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்கான தேர்தல் இன்று

கொழும்பு மாநகர சபையின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரதான ஒரு கட்சியால் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடியாததால் மாநகர சபையின் அதிகாரத்தை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

2023 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி வெற்றிடமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி 48 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும், பொதுஜன பெரமுன 5 இடங்களையும் வென்றிருந்தன.

117 இடங்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட, ஒரு கட்சி குறைந்தது 59 இடங்களைப் பெற வேண்டும்.

இதனடிப்படையில், கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை உருவாக்குவது தொடர்பாகப் பிரதான கட்சிகளுக்கிடையே சமீபத்திய நாட்களில் கடும் போட்டி நிலவி வருகிறது இந்தநிலையிலேயே, இன்று கொழும்பு மாநகர சபையின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...