Date:

பாராளுமன்ற சட்டத்தின் கீழ் இயங்கும் கல்‌எலிய முஸ்லிம் பெண்கள் அரபிக் கல்லூரியை வக்‌ஃப் சபைக்கு பலவந்தமாக ஒப்படைக்க முயற்சி

65 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரமாக இயங்கி வரும் கல்‌எலிய முஸ்லிம் பெண்கள் அரபிக் கல்லூரியை வக்‌ஃப் சபையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர சட்டவிரோதமான முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரி, 1991ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தின் 46ஆம் இலக்க சட்டத்தின்படி நிறுவப்பட்டதும், உரிய நிர்வாக அதிகாரம் கொண்ட, சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட நிர்வாக சபையின் கீழ் செயற்படுகின்றதும் ஆகும். எனவே, வக்‌ஃப் சபைக்கு இக்கல்வி நிறுவனத்தைக் கட்டுப்படுத்தவோ, அதற்கு ஆணை வழங்கவோ எந்தவொரு சட்டரீதியான அதிகாரமும் இல்லை.

பிரதான சட்டவிரோத செயற்பாடுகள்:
1. அதிகாரமின்றி ஆணை வழங்கல்:
வக்‌ஃப் சபைக்கு, மற்றொரு பாராளுமன்ற சட்டத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்திற்கு ஆணை வழங்கும் சட்டஅதிகாரம் இல்லை. வக்‌ஃப் சபை 1956ஆம் ஆண்டு 51ஆம் இலக்க சட்டத்தின்படி செயல்படுகிறது. இச்சட்டம் இஸ்லாமிய மதத்துடன் தொடர்புடைய வழிபாட்டு இடங்கள் மற்றும் சொத்துக்களுக்கு மாத்திரமே பொருந்தும்.
ஆனால், இந்த பெண்கள் அரபிக் கல்லூரி 1959 ஜனவரி 10 அன்று 27 மாணவிகளுடன் துவக்கப்பட்ட, அரச பாடத்திட்டத்தின்படி கல்வி வழங்கும், தனியார் வதிவிட கல்வி நிலையமாகும். பின்னர், 1991ஆம் ஆண்டு 46ஆம் இலக்க சட்டத்தின்படி இது பாராளுமன்றம் மூலமாக ஸ்தாபிக்கப்பட்டது.
இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட ஓர் நிறுவனம் வேறொரு பாராளுமன்ற சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனத்தினை கட்டுப்படுத்த முடியாது என்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய நிதர்சனமாகும்.
2. சட்டபூர்வமான வழிமுறையின்றி வழக்கு பதிவு செய்தல்:
வக்‌ஃப் சபையினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு பதி்வானது, எந்தவொரு சட்ட பூரண மனுவும் ஆதாரமுமின்றி, வெறும் அந்த சபையின் உறுப்பினரான இஸ்லாமிய மத மற்றும் பண்பாட்டு இயக்கங்களுக்கான பணிப்பாளர் ஒருவர் எழுதிய தனிப்பட்ட குறிப்பின் அடிப்படையிலேயே செயற்பட்டது.
இன்று நாட்டின் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமானால் உரிய ஆதாரங்களுடன் சரியான மனுவுடன் நிகழவேண்டும்.
மேலும், இந்த வழக்கு, சரியான நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படவேண்டியதென்றேயன்றி, தவறான முறையில் தான்தோன்றித்தனமாக தனிப்பட்ட குழுவின்ருக்கு பாரபட்சமாக செயற்படுவது கண்டனைக்குரியதாகும்.
3. உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி நடவடிக்கை:
வக்‌ஃப் சபை, இந்த வழக்கு பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினருக்கு வழங்கவில்லை. இது அடிப்படை மற்றும் இயற்கை நீதிமுறைக்கு எதிரானதொரு செயலாகும்.
பக்கச்சார்பாக செயற்பட்டு ஒரு குழுவினருக்கு சாதகமாக உண்மைகளை மூடிமறைத்து வழக்கு விசாரணை நடாத்தும் செயல் இலங்கை அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டதல்ல.

தற்போதைய நிலைமை:

இவ்வாறு வக்‌ஃப் சபை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கல்வி நிலையத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றது என்பது, அரச அதிகாரத்தை தவறான பயன்படுத்தலை வெளிப்படுத்துகின்றது.
இக்குற்றங்களை எதிர்த்து கல்லூரியின் நிர்வாக சபை இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் writ மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. அவர்களது நிலைப்பாடு, வக்‌ஃப் சபையின் இந்நடவடிக்கை சட்டவிரோதமானதும், அதனை இரத்துச் செய்யவேண்டியது்மாகும்.

மக்கள் கடமை:

இலங்கை பிரஜைகளாகிய எமது பொறுப்பு:
• சட்டத்தை மதிப்பது,
• பாராளுமன்ற சட்டங்களைப் பாதுகாப்பது,
• அரச அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்ப்பதுமாகும்.

இத்தகைய அதிகார துஷ்பிரயோகங்கள், தற்போதைய அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன்,
இலங்கை பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையை அவமதிப்பதாகும்.

MM Mohamed
(இக்கட்டுரை ஒரு சுயாதீன எழுத்தாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்டதாகும். இக்கட்டுரையின் உள்ளடக்கம், தகவல்கள் மற்றும் மேற்கோள்களின் துல்லியத்திற்கான பொறுப்பு அந்த எழுத்தாளர் தாமே ஏற்கின்றனர்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால்...

Breaking நாங்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கினோம் ,இனி பொருளாதார இலக்குகள் தாக்கப்படும்-ஈரான்

வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ஈரானின் தாக்குதல்கள் தொடரும்: முதல் இரவில்,...

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373