Date:

இலங்கை வங்கியின் அனைத்து கிளைகளின் சேவைகளும் இன்று முடக்கம்!

போனஸ் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம்முதல் இலங்கை வங்கி கிளை வலையமைப்பை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கமைய, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கை நிறுவனம் ஒன்று பதிவு செய்த மிகச் சிறந்த மற்றும் மிகப்பெரிய இலாபமான 107 பில்லியன் ரூபாயை இலங்கை வங்கியால் பதிவு செய்ய முடிந்தது.

இலங்கை வங்கி ஈட்டிய இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது.

இலங்கை வங்கி ஊழியர்களுக்கும் பணிப்பாளர் குழுவிற்கும் வழங்கப்பட உள்ள அங்கீகரிக்கப்பட்ட போனஸ் தொகையைக் குறைப்பது தொடர்பாக நிதியமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பணம் தொடர்பாக இரண்டு பிரதி அமைச்சர்களால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்த நிதியமைச்சு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. ஒப்புக்கொள்ளப்பட்ட போனஸ் தொகையில் நியாயமற்ற குறைப்புக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி...

18 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக IPL கிண்ணத்தை கைப்பற்றிய RCB !

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக...

நாட்டை வந்தடைந்தது தேங்காய் பால் கப்பல்…!

தேங்காய் சார்ந்த தொழில்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் மூலப்பொருள் இறக்குமதி...

மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373