Date:

மீண்டும் விளக்கமறியலில் மெர்வின், பிரசன்ன ரணவீர

முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (26) மீண்டும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில் இந்த வழக்கு இணைய வழி ஊடாக அழைக்கப்பட்டது.

கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை உருவாக்கி விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவரும் விள்ளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளனர்.

இதன்போது, அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதவான் காஞ்சனா சில்வா, தற்போது விளக்கமறியலில் உள்ள மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஏனைய நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்போது, பிரசன்ன ரணவீரவால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373