Date:

விரைவில் மாகாண சபைத்தேர்தல் – நிசாம் காரியப்பருக்கு அரசு பதில்

நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைத்தேர்தல் இவ்வருடத்திற்குள் நடைபெறுமென ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், மாகாண சபைத்தேர்தலை நடத்துவதென்றால் மாகாண சபைத்தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தற்போதைய இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கேற்றவாறு தனி நபர் பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

கடந்து அரசாங்கம் கவனத்திலெடுக்காததால் அவை நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபைத்தேர்தல் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் படி இவ்வருடத்திற்குள் நடைபெறுமா?, அதற்கான சட்டமூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா? எவ்வாறான நடவடிக்கை?, நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் என்ன காரணம்? என்ற தோரணையில் பொது நிர்வாகம் மற்றும் உளளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரிடம் இன்று (23) பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர் கேள்வி தொடுத்திருந்தார்.

குறித்த கேள்விகளுக்கு விடயத்திற்குப் பொறுப்பான பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபை அமைச்சர் தாமதமின்றி மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும். உரிய ஏற்பாடுகள் எடுக்கப்படுவதாக எனப்பதிலளித்தார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...

தங்கத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை...