Date:

புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு திருவுளச்சீட்டின் மூலம் ஒருவர் தெரிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு வண்ணாத்திவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திருவுளச்சீட்டின் மூலம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வண்ணாத்திவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு வண்ணாத்திவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு திருவுளச்சீட்டு குழுக்கி போடப்பட்டது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 4 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்..! ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை..!

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும்,...

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...

சர்ச்சைக்குரிய ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373