Date:

கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை

கொழும்பு மாநகர சபை (CMC) உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (07) தடை உத்தரவைப் பிறப்பித்தது.பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்களை நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்களை தொடர அனுமதி அளித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, மனுக்களுக்கு ஆட்சேபனைகளை மே 5 ஆம் திகதி அல்லது அதற்கு முன் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேவைப்பட்டால், மே 7 ஆம் திகதிக்குள் ஏதேனும் எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டது.

விசாரணையின் போது, ​​மனுக்களின் விசாரணையை மே 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அந்த திகதி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டது.

குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிப்புகள் செய்யப்படவில்லை என்ற அடிப்படையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தங்கள் வேட்புமனுக்களை நிராகரிக்க எடுத்த முடிவுகள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பத்தரமுல்லையில் ஓர் உல்லாசத் தீவு

பத்தரமுல்ல பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை...

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் தீர்க்கமான ஒருநாள்...

ஹிஸ்புல்லாஹ்வின் 6 வழக்குகளும் தள்ளுபடி

ரீ.எல்.ஜவ்பர்கான் நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ்...