Date:

’இஸ்லாமிய தீவிரவாதம் தப்பான பதம்’

பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் .இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு  முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என  ஸ்ரீ  லங்கா முஸ்லிம்  காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்   நிசாம்   காரியப்பர்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05)  இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்…

.கிழக்கில் அடிப்படைவாதம்  என்ற கூற்றின் ஊடாக  எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள்  முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். இவ்வாறான கூற்றுக்களை கொண்டு  பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே  இந்தக்கூற்றின்  உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால மற்றும்    அமைச்சரவை பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம்   தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக, புதன்கிழமை (05)  வெளிவந்துள்ளன.

குறிப்பாக ‘ கல்முனை பகுதிகளில்  மத அமைப்புக்களினால்   பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக  பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க  வேண்டியுள்ளது’ என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றார்..

கூற்றுக்களில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அமைப்புக்களின் பெயர்கள் எதுவும்  குறிப்பிடப்படவில்லை.கல்முனை  ஜும்மா பள்ளிவாசல்,  பள்ளிவாசல் சம்மேளனம்,   ஜம் இய்யதுல் உலமா சபை   உட்பட இஸ்லாமிய  அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும்,   தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளனர் என்றார்..

இவ்வாறான அடிப்படைவாத போக்குகள் உள்ள குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு  யார் நிதி வழங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள எமது மக்கள் ஆர்வமாக உள்ளனர் . எனவே புலனாய்வு விசாரணைகள் சட்டத்துக்கு அமைவாக  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..

இதற்கு முன்னரும் முஸ்லிம் சமூகம்  பல விடயங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படாதவில்லை. இதனால் சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன . இன்னொரு சஹ்ரானின் சம்பவம் இந்த நாட்டில் இனி ஒருபோதும் இடம்  பெறக் கூடாது என்றார்.

கிழக்கில் அடிப்படைவாதம்  என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீய  சக்திகள்  முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும்.    அதிகாரபூர்மற்ற அறிவிப்புக்கள்   வீண்  அச்சம்  மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான பொதுவான கூற்றுக்களினால்  சமூகத்தில்  இஸ்லாமிய அடிப்படைவாதம்  செயல்படுகிறது என்ற பழைய   தவறான அபிப்பிராயம் மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கிழக்கில் அடிப்படைவாதம்  என்றஅமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுப்படுத்தி  அரசாங்கம் பொதுவான  நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். புலனாய்வு  தகவல்களின் அடிப்படையில்   எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும்  அறிந்து  கொள்ள விரும்புகிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...