Date:

நோன்பு துறக்கும் நேரத்தில் மாற்றம்..!

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மஃரிப் தொழுகையின் அதானை கலண்டரில் உள்ள நேர சூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ஒரு நிமிடத்தைக் கூட்டி அதான் சொல்லி நோன்பு திறக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

புவியியல் மாற்றங்கள், பாதைகள் விஸ்தரிப்பு, மற்றும் உயர் மாடிக்கட்டடங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சில நாட்களில் மஃரிப் தொழுகையின் அதான் சொல்லப்படும் நேரத்தில் சூரியன் தென்படுவதை அவதானிக்க முடிவதாகவும் இதனால் இந்த விடயத்தை மக்களுக்கு அறிவூட்டுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஹஸனிய்யா அரபுக் கல்லூரியும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஜம்இய்யா அறிவித்துள்ளது.

இலங்கையில் சூரிய உதயம் அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள் முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு பின்னர் அல் ஆலிம் அப்துல் சமத் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழுகை நேர அட்டவனையே தற்போது வரை அமுலில் இருந்து வருகிறது.

இந்த அட்டவனையை இற்றைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ஹஸனிய்யா அரபுக்கல்லூரியும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து விரிவான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கலந்துரையாடலில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ரமழான் மாதம் அண்மித்திருப்பதால் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு தற்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...