Date:

மாரடைப்பினால் இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

இந்தியாவின் 19 வயதுக்குட்டோர் அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்ட கிரிக்கெட் வீரர் அவி பரோட்  மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் மரணித்துள்ளார்.

இளம் வயதில் தந்தையை இழந்த அவி பரோட், தமது தாய் மற்றும் மனைவியுடன் வசித்துவந்திருந்தார்.

அவரது மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ளதாகவும் இது அவி பரோட் தம்பதியின் முதல் குழந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின், சௌராஷ்ட்ரா கிரிக்கெட் கழகத்தினூடாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த அவி, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய உள்ளூர் அணிகளுக்காக விளையாடியுள்ளதுடன், 2011 ஆம் ஆண்டில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான அவி பரோட், 38 முதற்தர போட்டிகளிலும், 20 உள்ளூர் இருபதுக்கு20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். துடுப்பாட்டத்தில் முதற்தர போட்டிகளில், 1,547 ஓட்டங்களையும். இருபதுக்கு20 போட்டிகளில் 717 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.