Date:

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட்

இருபது20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் (Rahul Dravid) பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறையடையவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர்வரையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் ராகுல் ட்ராவிட் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியின்போது, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) மற்றும் செயலாளர் ஜே ஷா (Jay Shah) ஆகியோர், ராகுல் ட்ராவிட்டுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்க ராகுல் ட்ராவிட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...