நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததால், பல பகுதிகளில் மீண்டும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) உறுதிப்படுத்தியுள்ளது.
“நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயல்படாததால், சில பகுதிகளுக்கு மின்சாரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்று மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டைத் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.