Date:

மேல் மாகாண வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணி மீள ஆரம்பம்

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அண்மையில் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

இந் நிலையில் இன்று முதல் இந்த அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு வாகன உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாக மேல்மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திணைக்களத்தின் இணைய தளத்தில் ஊடாக ஆன்லைன் மூலம் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு கம்பஹா களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளில் ஊடாகவும் அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண ஆளுநர் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 12ஆம் திகதி முதல் காலாவதியான மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் டிசம்பர் 31ஆம் திகதிவரை வழங்கப்பட்டுள்ள சலுகைக் காலத்தை இரண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல்: சிஐடியில் விமல் ஆஜர்

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து தொடர்பாக...

கீரி சம்பாவுக்கு செயற்கை தட்டுப்பாடு

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் லோகன் ரத்வத்த கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறிது...

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...