Date:

சைஃபுதீன் ஜாஃபர்ஜி, வருடாந்த பொதுக் கூட்டத்தில் JAAF-இன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் (JAAF) தனது 21வது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஜனவரி 27ம் திகதி கொழும்பில் நடத்தியது. இந்த நிகழ்வில் கலலந்து கொண்டு உரையாற்றிய மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, கடந்த ஆண்டின் சாதனைகளைப் பிரதிபலித்தார், அதே நேரத்தில் ஆடைத் தொழில்துறையில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினார்.

“இந்த அற்புதமான தொழில்துறையில் மீண்டும் பணியாற்றுவதில் நான் மிகவும் கௌரவிக்கப்படுகிறேன்,” என ஜாஃபர்ஜி குறிப்பிட்டார், தன்னிடம் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அவர், இந்தத் துறை 5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலங்கை தாண்டி மீண்டும் உயர்ந்ததைக் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த மைல்கல்லை தொழில்துறை தலைவர்கள் மற்றும் குழுக்களின் கூட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் முயற்சிகளுக்கு அடையாளம் காட்டினார். எவ்வாறாயினும், கம்போடியா, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற பிராந்திய தொழிற்துறை நிபுணர்களிடமிருந்து கூடுதலான போட்டி மற்றும் விலை அழுத்தங்கள் காரணமாக மீட்சி எவ்வளவு பலவீனமானது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கியமான சந்தைகளில் இறக்குமதிகள் தேங்கிப் போனாலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சந்தைகளில் ஆண்டு-ஆண்டு நிலையான முன்னேற்றத்தை ஜாஃபர்ஜி சுட்டிக்காட்டினார், இலங்கைக்கு மீண்டும் முக்கிய வர்த்தக நாமங்களை ஈர்க்க தொழில்துறை-நிலை கூட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட முயற்சிகள் உலகளாவிய வாங்குபவர்களை ஈர்க்க மற்றும் புதியவர்களை ஈர்க்க முக்கியமான படிகளாகும் என்று குறிப்பிட்டார். “இந்த வளர்ந்து வரும் நிலப்பரப்பில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய புத்தாக்கம் முக்கியமானது,” என அவர் வலியுறுத்தினார்.

பரந்த பொருளாதார காலநிலையைப் பிரதிபலித்து, ஜாஃபர்ஜி, IMF திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் உள்ளிட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள், JAAF-இன் வாதங்களுக்கு எவ்வவாறு சவால்களை ஏற்படுத்தியது என்பதைக் குறிப்பிட்டார். ஆண்டின் முக்கிய வெற்றிகளில் SVAT திட்டத்தின் தொடர்ச்சி, மின்சார கட்டணங்களில் திருத்தங்கள், ஏறாவூர் ஜவுளி வலய வளர்ச்சியில் முன்னேற்றம் மற்றும் ஐரோப்பபிய ஒன்றியத்துடன் இந்தோனேசிய ஜவுளிக்கான ஒட்டுமொத்த நன்மைகளைப் பெறுவது ஆகியவை அடங்கும். இலங்கை இந்தோனேசிய ஆடைகளின் ஒட்டுமொத்தத்திற்காக இங்கிலாந்திடம் விண்ணப்பித்துள்ளது மற்றும் அடுத்த சில மாதங்களில் இது வழங்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

JAAF முன்னோக்கிப் பார்க்கையில், புதிய சந்தை அணுகலைத் திறப்பது, அரசாங்க வணிக வசதிக் கொள்கைகளுடன் இணையும் வகையில் டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிப்பது, வரிச் சீர்திருத்தங்களுக்காக வாதாடுவது மற்றும் முக்கிய கட்டணங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முன்னுரிமைகளை ஜாஃபர்ஜி விவரித்தார். “இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தி முன்னுரிமை அணுகலைப் பெற வேண்டும், அதே நேரத்தில் போட்டித்தன்மையைத் தக்கவைக்க தொழிலாளர் சீர்திருத்தங்களை வலியுறுத்த வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

ஜாஃபர்ஜி, JAAF-இல் அங்கம் வசிக்கும் சங்கங்கள், துணைக் குழுத் தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் உறுதியான பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

“புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன், நெகிழ்வான, போட்டித்தன்மை மிக்க மற்றும் தூரநோக்குப் பார்வையுள்ள ஒரு தொழில்துறையை உருவாக்குவோம்,” எனக் கூறி ஜாஃபர்ஜி தனது உரையை முடித்தார், 2025-இல் இந்த உந்துதலை முன்னோக்கி எடுத்துச் செல்ல பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்.

நியமிக்கப்பட்ட JAAF நிறைவேற்றுக் குழுவில் பின்வருவோர் அடங்குவர்: சைஃபுதீன் ஜாஃபர்ஜி – தலைவர், ஃபீலிக்ஸ் பெர்னாண்டோ – துணைத் தலைவர், Aroon Hirdaramani – துணைத் தலைவர், Sharad Amalean – ஏ. சுகுமாரன் – நொயெல் பிரியதிலக்க – அஷ்ரஃப் ஓமர் – (அஜீம் இஸ்மாயில் – (சமல் திஸாநாயக்க, ஹேமந்த பெரேரா, வில்ஹெல்ம் எலியாஸ், ரஜித ஜயசூரிய – தம்மிக பெர்னாண்டோ – மகேஷ் ஹைட்ராமணி, அஜித் விஜயசேகர, ஜாஃபர் சத்தார், அனிஸ் சத்தார், ரெஹான் லக்கானி, மஹிகா வீரக்கோன், மற்றும் இந்திகா லியனஹேவாகே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிள்ளையான் கைது…!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை...

Breaking தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை

கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனை  பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய...

ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு : அமைச்சரவை அனுமதி

2025 வரவு செலவுத்திட்டத்தின் படி தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பிணை..!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373