Date:

லசந்த படுகொலை;பிரதான சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

த சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி மற்றும் முன்னாள் டிஐஜி உட்பட மூன்று நபர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தனது சட்ட ஆலோசனையை வழங்கியுள்ளார்.

ஜனவரி 27, 2025 அன்று சிஐடி தலைவருக்கு சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவினால் அனுப்பப்பட்ட ஆலோசனைக் கடிதத்தில், நீதவான் விசாரணை வழக்கு எண் B/92/2009 தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட முன்னாள் சர்ஜென்ட் பிரேம் ஆனந்த உடலகம,கல்கிஸ்ஸை பொலிஸின் முன்னாள் குற்றப்பிரிவு அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் ஓய்வுபெற்ற மூத்த டிஐஜி பிரசன்ன நாணயக்கார ஆகிய மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தரப்பு விரும்பவில்லை என்று கூறினார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாகக் கூறி மூன்று சந்தேக நபர்களும் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் பிணையில் வெளியே உள்ளனர்.

சட்டமா அதிபரின் கடிதத்தின் பிரதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் 14 நாட்களுக்குள் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேலும் அறிவுறுத்தினார்.

கூடுதலாக, 2009 ஆம் ஆண்டு ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பாக உடலகம ஒரு சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...