Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி

அனைத்து இன மக்களதும் உயிர் தியாகங்களால் உயிர்பெற்ற எமது தாய் நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்சிச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனது சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. சமாதானம், சகோதரத்துவம், சந்தோசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த சிறப்புமிக்க சுதந்திரத்தை நமது நாடும், நாட்டு மக்களும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதோடு இனவாதமற்ற அனைத்தின மக்களும் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் நமது நாடு தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியிலான பல்வேறு நெருக்கடுகளை எதிர்நோக்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் வளமான அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க இந்த நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக்கொள்வோம்.

இந்த தேசிய சுதந்திர தினத்தில், எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தம் உயிர்களை தியாகம் செய்த அனைவரையும் நாம் மரியாதையுடன் நினைவு கூர்வதோடு, அனைத்து சவால்களையும் முறியடித்து நாளைய விடியலுக்காக வளமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...