Date:

காலணிகளுடன் ஆலயத்துக்குள் பிரவேசித்த காவல்துறை உயரதிகாரி

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களுக்குள் காலணிகளுடன் பிரவேசித்த காவல்துறை அதிகாரியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரே இவ்வாறு ஆகம விதிகளை மீறி ஆலயங்களுக்குள் காலணிகளுடன் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று நண்பகல் சென்ற காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் மற்றும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று  வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலயங்களுக்கு வெளியில் காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், மேற்படி காவல்துறை அதிகாரி காலணிகளைக் கழற்றாது ஆலயங்களுக்குள் சென்ற விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373