தன்னுடைய 15 வயது மகனை, 2025 ஜனவரி 02 ஆம் திகதி முதல் காணவில்லை என அவருடைய தாய், 04 ஆம் திகதியன்று களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஜேசன் மொஹமட் என்பரே காணாமல் போயுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தோர், களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையம் 071-8591691 மற்றும் களுத்துறை பொலிஸ் தலைமையகம் 034-2222222 அல்லது 034-2222223 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.