Date:

அசாத் சாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை, எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நகர்த்தல் பத்திரத்தினூடாக, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அசாத் சாலியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி, குற்றப் புலனாய்வு திணைக்கத்தினரால் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...