Date:

மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியா பெண் தற்கொலை செய்யவில்லை, கொலை…

மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியா  பெண் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. யான சிறீதரன் தெரிவித்தார்.எனினும் இது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) விசேட கூற்றை  முன்வத்த   சிறீதரன் எம்.பி. அந்த யுவதி கொலைச்செய்யப்பட்டுள்ளார் என்றார்.

​அவர் தொடர்ந்து   கூறுகையில்,

மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியாவை  சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்யவில்லை . பொலிஸ் நிலையத்திற்குள் அவர் எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முடியும்? அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஒரு கைதியான அவர் எவ்வாறு மரணத்தை தழுவ முடியும்?

இது ஒரு பயங்கரமான செய்தி. எனவே இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜே பால,நீதியைப்பெற்றுத்தர வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நீங்கள் முன்வைத்துள்ள இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் (23) ஆராய்ந்து உங்களுக்கு பதில் வழங்குவேன் என்றார்.

பின்னர் இதற்கு பதில் வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால,

வவுனியாவை சேர்ந்த குறித்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்  என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக இருந்து பிடியாணையில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (22) துரதிஸ்டமான சம்பவம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை வியாழக்கிழமை (23) நடைபெற்றது. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373