Date:

வௌ்ளைப்பூண்டு மோசடி – சதொச அதிகாரிகள் விளக்கமறியலில்

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நால்வரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தள நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த 4 சதொச அதிகாரிகள் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொள்வனவு தொடர்பான உதவி மேலாளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர் மற்றும் வெலிசர மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலங்களை வழங்குவதற்காக சந்தேகநபர்கள் நேற்று வந்திருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...