Date:

காஸாவில் இன்று முதல் போர் நிறுத்த

காஸா எல்லையில் இன்று காலை 8.30 முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் பணயக்கைதிகள் மற்றும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான பரிமாற்றம் இடம்பெறுமென கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகித்தன. இது 3 கட்டங்களாக செயற்படுத்தப்படுத்தப்படவுள்ளது.
முதல்கட்டமாக 6 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த காலப்பகுதியில் ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதுடன், இவர்களில் பெண்கள், குழந்தைகள், இராணுவ வீரர்களும் அடங்குகின்றனர்.

இதனிடையே இஸ்ரேலில் இருந்து 737 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பட்டியலும் தயாராகியுள்ளது.

இருதரப்பிலிருந்தும் இன்று மாலை 4 மணி அளவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிள்ளையான் கைது…!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை...

Breaking தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை

கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனை  பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய...

ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு : அமைச்சரவை அனுமதி

2025 வரவு செலவுத்திட்டத்தின் படி தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பிணை..!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373