Date:

அரசாங்கத்திற்கு இன்னுமொரு பிரபகாரனும் சஹ்ரானும் தேவை

இனவாதத்தை பயன்படுத்துவதற்கும் இன்னுமொரு பேரழிவை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு இன்னுமொரு பிரபாகரன் அல்லது சஹ்ரான் தேவைப்படுகின்றது என ஜேவிபியின் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தங்களின் தோல்விகளை மறைப்பதற்கும் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்புவதற்கு அரசாங்கத்திற்கும் இவ்வாறான பேரழிவுகளை பயன்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கும் சிறில்மத்தியு போன்று செயற்படும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் இவ்வாறான முயற்சிகள் மூலம் நாட்டிற்கு சாதகமான எதுவும் நடைபெறப்போவதில்லை என தெரிவிக்க விரும்புகின்றோம் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை பின்பற்றாதவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு சிஐடியினரை பயன்படுத்துகின்றனர் எங்கள் கட்சி உறுப்பினர்களின் வீடுகளிற்கு சிஐடியினரை அனுப்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...