Date:

அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம்..!!

(எஸ். சினீஸ் கான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு இன்று (27) வருகைதந்தார்.

காத்தான்குடி அல்-அக்ஸா பெரியபள்ளிவாயலில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் ஜும்ஆ பேருரை, தொழுகையினையும் நடத்தியதுடன் பல குரல்களில் அல்-குர்ஆனையும் ஓதிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையினை ஏறாவூர் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் இஷா தொழுகையினை வாழைச்சேனை முகைத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் நடத்திவைத்தார்.

அஷ்ஷேய்க் முகம்மது சஆத் நுமானி சவூதி அரேபியா மக்கா ஹரம் ஷரீபின் தலைமை இமாமான அஷ்ஷேய்க் சுதைஷ் அவர்களது குரல் உட்பட பல்வேறுபட்ட இமாம்களின் குரல்களில் புனித அல்குர்ஆன் வசனங்களை ஓதக்கூடிய சிறந்த “காரியாக” திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை வந்த ரஷ்யா உதவி விமானம்!

நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம்...

பதுளை மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத்...

எஞ்சியுள்ள உயர்தரப் பரீட்சை மீள் ஆரம்பத் திகதி இதோ!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

பாடசாலைகள் ஆரம்பத் திகதி அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்...