Date:

சமையல் எரிவாயு – கோதுமைமா விலைகளில் மாற்றம்

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று(09) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை நிர்ணயம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் நிறுவனத்தில் உள்ளக ரீதியாகக் கலந்துரையாடல்களை நடத்தி, இறுதி விலை தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

அந்த விலை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக ப்றீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை, 15 முதல் 20 ரூபாவுக்கு இடையில் அதிகரிக்க அந்த நிறுவனம் தற்போது தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...