Date:

புத்தளம், பொலவத்தை சந்தியில் எம்.பி வாகனத்தில் மோதி பெண் மரணம்

புத்தளம், பொலவத்தை சந்தியில் உள்ள  பாதசாரி கடவையில் நடந்து சென்ற யாசக  பெண் ஒருவர் மீது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 65 – 70 க்கு இடையிப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திங்கட்கிழமை (8) அன்று  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கஜேந்திர குமாரின்  சாரதியான ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர்  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...