Date:

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை தோல்வி

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

மேற்படி பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனைய அனைவரும் வெளிநடப்பு செய்திருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த பிரேரணையை மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையில் நிறைவேற்றுவதற்கு தென்கொரியாவின் எதிர்க்கட்சி தவறியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல் அவசரமாக இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

இதனையடுத்து, தென் கொரியாவின் சியோலில் உள்ள தேசிய பாராளுமன்றத்துக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதியை நீக்கம் செய்யக்கோரி ஒன்று திரண்டனர்.

இந்தநிலையில், குறித்த இராணுவச் சட்டத்தினை அமுல்படுத்தவதற்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.

எனினும், ஜனாதிபதி யூன் சுக் யோல், இராணுவச் சட்டத்தை அறிவித்ததற்காக நேற்று பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியதுடன், மீண்டும் அதனை அமுல்படுத்தப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிடியாணையை எதிர்த்து ராஜித மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த...

ஹல்லொலுவவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம்...

USS TULSA’போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...