Date:

மதரஸா மாணவர்களின் உயிரிழப்பு ; ரிஷாட் விசனம்

காரைதீவு – மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த  சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் செவ்வாய்க்கிழமை (03)  சபையில் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அம்பாறை மாவட்டத்தில், மாவடிப்பள்ளியில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது வீடுகளுக்கு நான்  விஜயம் செய்திருந்தேன். அப்போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பட்டினாலேயே இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி விசனம் வெளியிட்டனர்.

குறிப்பாக, இந்த சம்பவம் இடம்பெற்ற போது, பொலிஸார் கடமையில் இருந்திருக்கிறார்கள். வெள்ளப் பாதிப்பினால், மதரஸாவிலிருந்து வெளியேறுவதற்கு வழி இல்லாததன் காரணமாகவே, மதரஸா நிர்வாகம் மாணவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி அனுப்பியிருக்கின்றது.

இவ்வாறு அவர்கள் அந்தப் பாதையில் பயணித்த போது, வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்திருந்த நிலையில், பொலிஸார் வீதியை மூடாமல், போக்குவரத்துக்கு அனுமதி அளித்தமையானது பொறுப்பற்ற செயற்பாடாகும். அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை விளக்கியிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கு பிற்பாடு, கடற்படையினர் வருகை தந்து, அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதுவரைக்கும், பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, அங்கிருந்தவர்கள் இரண்டு உயிர்களை முயற்சி செய்து காப்பாற்றி இருக்கிறார்கள். இதன்போது, அங்கிருந்த பொதுமக்கள், வெள்ளத்தில் சிக்குண்டவர்களை காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் கெஞ்சியபோது, பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்திருகின்றார்கள். பொலிஸ் நிலையத்துக்கு அவர்கள் சென்று, ஒரு மணித்தியாலம் வரை முறைப்பாட்டை செய்வதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

ஒரு அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கான துரித பாதுகாப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடாது, இந்த மக்களை இவ்வாறு அங்குமிங்கும் செல்லுமாறு பணித்திருப்பது கவலை தருகின்ற விடயம்.

எனவே, இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என்று, இந்த உயர் சபையில் கோரிக்கை விடுக்கின்றேன் ” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373