முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் நேற்று (29) பிற்பகல் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.
குளிர் காரணமாக வீட்டிற்கு முன்னால் தீ மூட்டியதாகவும், அந்த தீ பரவியதன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.