வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது.