Date:

நெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

காஸாவில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தவிர, கடந்த ஆண்டு ஒக்டோபா் 7ஆம் திகதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் தொடா்பாக ஹமாஸ் தலைவா்களுக்கு எதிராகவும் அந்த நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஸாவில் நெதன்யாகுவும் யோவாவ் காலன்டும் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற போா்க் குற்றத்தில் ஈடுபடுவதால் அவா்களை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நீதிமன்றத்தின் குற்றஞ்சாட்டு வழக்குரைஞா் கரீம் கான் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அப்போது அவா் வெளியிட்ட அறிக்கையில், காஸா மக்கள் உயிா்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவா்களுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நெதன்யாகுவும் கலான்டும் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி செய்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை குற்றச்சாட்டுகள் தொடரபான கோரிக்கைகளை   ஏற்றுக் கொண்டுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், கைது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...