Date:

கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரம் திருத்தம்

நவம்பர் 21 ஆம் திகதி 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21ஆம் திகதி காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் முற்பகல் 11:30 மணியளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றம் முன்னதாக அறிவித்தது.

அரசியலமைப்பின் உறுப்புரை 33(அ) பிரிவின்படி, பாராளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கக் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மேலும், அரசியலமைப்பின் உறுப்புரை 33 (ஆ) படி, ஜனாதிபதி பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கு உரிமையுடையவராவார்.

இந்த அமர்வின் போது, ​​அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வரவிருக்கும் முன்முயற்சிகள் பற்றிய விரிவான விளக்கத்தை, கொள்கை அறிக்கையின் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் பொதுமக்களுக்கும் வழங்குவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...