Date:

கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரம் திருத்தம்

நவம்பர் 21 ஆம் திகதி 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21ஆம் திகதி காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் முற்பகல் 11:30 மணியளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றம் முன்னதாக அறிவித்தது.

அரசியலமைப்பின் உறுப்புரை 33(அ) பிரிவின்படி, பாராளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கக் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மேலும், அரசியலமைப்பின் உறுப்புரை 33 (ஆ) படி, ஜனாதிபதி பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கு உரிமையுடையவராவார்.

இந்த அமர்வின் போது, ​​அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வரவிருக்கும் முன்முயற்சிகள் பற்றிய விரிவான விளக்கத்தை, கொள்கை அறிக்கையின் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் பொதுமக்களுக்கும் வழங்குவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்: நாசர் ஹுசைன் சொன்ன அதிரடித் தகவல்!

வரவிருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி யாரும் எதிர்பார்க்காத...

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில்...