ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.