Date:

பனாம முஸ்லிம் மகா வித்தியாலயவாக்களிப்பு நிலைய கழிவறையிலிருந்து சடலம்

கொபேகனே, பனாம முஸ்லிம் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கழிவறைக்குள் உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளராக கடமையாற்றிய ஏ.எம்.அஸீம் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட நிக்கவெரட்டிய நீதவான் சந்தன லியனகே சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த குணவர்தன மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமின குமார ஆகியோரின் பணிப்புரைக்கமைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபேகனே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார மேற்கொண்டு வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...