Date:

கிராண்ட்பாஸ் முதுர உயன அடுக்குமாடி குடியிருப்பு;மின்தூக்கி விழுந்ததில்..

கிராண்ட்பாஸ் முதுர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மின்தூக்கி (லிஃப்ட்) சரிந்து விழுந்ததில் கிராண்ட்பாஸ் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் காவல்துறையில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் மின்தூக்கி சரிந்து விழுந்ததில் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸாரின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், இந்த வீட்டுத் தொகுதியின் 5வது மாடியில் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை (10) பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளனர்.

அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்துசென்ற பொலிஸார், நிலைமையை விளங்கப்படுத்திவிட்டு, மீண்டும் திரும்பியபோதே, நான்காவது மாடியில் வைத்து,  மின்தூக்கி விழுந்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள்...

506 BYD வாகனங்கள் விடுவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத்...

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இளைஞனைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...