Date:

ரணிலின் கூற்றுக்கு NPP பதில்

அனுபவம் வாய்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாவிட்டால் நாடு கொத்தலாவல பல்கலைக்கழக பஸ் போன்று விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கூற்றுக்கு , 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி சீரழித்த அனுபவசாலிகள் என்று அழைக்கப்படுபவர்களை இனி ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டாம் என தேசிய மக்கள் சக்தி (NPP) பதிலளித்துள்ளது.

பதுளையில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய NPP உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, மக்களுடன் சிறந்த உறவை அமைக்க , மக்கள் NPP க்கு மாத்திரமே மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.

“அனுபவமுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ரணில் சொல்வதைக் கேட்டேன். சாரதியின் தவறினால் ஏற்பட்ட விபத்தைப் போன்று அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகாவிட்டால் நாடு KDU பேருந்தைப் போல் நொருங்கும் என ரணில் சொன்னதைக் கேட்டேன்.

ஆம் அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது. 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி, நாட்டையே சீரழித்து  திவாலாக்கினர். நாட்டைத் திவாலாக்கிய அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கு மக்கள் ஒருபோதும் இனி அதிகாரத்தைக் கொடுக்க மாட்டார்கள்,” என்றார்.

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் வாரயிறுதியில் நடைபெற்ற மாநாட்டில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனுபவம் வாய்ந்தவர்களை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தெரிவு செய்யத் தவறினால் துன்ஹிந்த – பதுளை வீதியில் கவிழ்ந்த பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின்...

எரிவாயு விநியோகம் செய்வதில் சிக்கல்

கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு...

உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம், ஆசியாவில் பேரழிவுகளால்...