Date:

ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வடகொரியா எச்சரிக்கை

வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏவுகணை சோதனையைத் தொடங்கியுள்ள வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளைப் பரிசோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தச் சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை கடந்த வெள்ளிக்கிழமை அவசர கூட்டமொன்றை நடத்தியது.

அந்த கூட்டத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக் குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு சபை, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் சபையின் தீர்மானங்களை முழுமையாகச் செயற்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...