Date:

‘பென்டோரா பேப்பர்ஸ்’: ட்ரான்ஸ்பெரன்ஸி விடுத்துள்ள கோரிக்கை

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பென்டோரா பேப்பர்ஸ்’ குறித்து உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பது அவசியம் என ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் கோரியுள்ளது.
குறித்த ஆவணங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில், இலங்கையின் அரச சொத்துக்கள் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றே அந்த நிறுவனம் கேட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரியுள்ளது. அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படாமல், விசாரணைகளை நடத்த இடமளிக்குமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.
உலக அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வர்ர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல் பட்டியலான பென்டோரா பேப்பர்ஸ்’ இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் அவரது கணவரான பிரபல வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயரும் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373