Date:

சிலிண்டரா? யானையா?: ஆராய்கிறது ஐ.தே.க

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டத்தில் ஆராயப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டர் அல்லது யானையை தெரிவு செய்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணக்கம் காணப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்  ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

செயற்குழு பரிசீலிக்கும் பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும்  ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பல விசேட கூட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றதுடன், இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள், முகாமையாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373