Date:

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நவம்பர் மாதம் நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நிதியமமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

பாதீடு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெறவுள்ளதோடு 16 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...